ஸ்ரீ தூப்புல்மால் ஸத்ஸம்ப்ரதாய க்ரந்தமாலா

    Sri:

Srimathe Gopaladesika Mahadesikaya Nama:

Srimathe Raghuveera Mahadesikaya Nama:

தூப்புல் அம்மான் ஓர் புகழ் அன்றி உய்வு இல்லையே

பேராளன் பேர் ஓதும் பெரியோர்காள்!  

"அன்று இவ்வுலகினை ஆக்கி . . . . தவிர்த்தனனே" என்றும், "வேங்கடேசாவதாரோயம் . . ."  என்றும் ஸ்ரீமத் நயிநாராசார்யர் தாமே அருளினபடி, ஸாக்ஷாத் திருமலையப்பனின் அவதாரமே நம் ஸ்வாமி தேசிகன் என்பதை, "தூப்புல்மால்" என்ற பதத்தாலே ஸ்பஷ்டமாக அருளிச்செய்தாராயிற்று. "அநுப்ரவிச்ய குருதே" என்ற ரீதியில், ஸர்வ ஆசார்யர்களும் பகவத் அநுப்ரவேசாவதாரர்களாய் இருக்கிற போதிலும், நம்  ஸ்வாமி தேசிகன் ஸாக்ஷாத் எம்பெருமானின் அவதாரமே ஆனபடியால், "தூப்புல் மால்" என்கிற திவ்ய பதத்தை தேசிகனடியார்கள் ஸேவிக்கிற போழ்தெல்லாம் அது, "அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே" என்கிற ரீதியில், கொள்ளமாளா இன்ப வெள்ளம் தரக்கூடியதொன்றாம். 

அந்த அநுபவ பரீவாஹத்தாலேயே, இந்த புஸ்தக ப்ரகாசனத் தொடருக்கு "ஸ்ரீ தூப்புல்மால் ஸத்ஸம்ப்ரதாய க்ரந்தமாலா" என்று திருநாமம் ஸமர்ப்பித்து மகிழ்கிறோம்.  

"எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே" என்றும், "மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம்" என்றும், "வேதாந்த உதயந ஸம்ப்ரதாய ஸுதாம்" என்றும், நம் தூப்புல் மால் பெருமையுடன் அருளினபடியான அத்விதீயமான உன்னதியை உடைய நம் ஸத்ஸம்ப்ரதாயத்தின் க்ரந்தங்களை யதாசக்தி ப்ரசுரித்து, தொண்டர்க்கு அமுது உண்ணலாம்படிப் பண்ணவேணும் என்கிற அவாவினால், தூப்புல் மாலான ஸ்வாமி ஸ்ரீதேசிகனின் பெருங்கருணையாகிற பெருங்கடலிலே ஒரு திவலையைப் பருகுமோபாதி முயற்சிக்கும் அடியோங்களின் இந்த கைங்கர்யம் "வர்ததாம் அபி வர்ததாம்" என்கிற ரீதியில் செழிக்கும்படி நம் தூப்புல்மாலையே இறைஞ்சியபடி. 

தூப்புல் மாலே மறவேன் இனி நின் பதமே. 

தாஸன்

திருவெவ்வுள். ராகவந்ருஸிம்ஹன்

Adiyen. With the divine grace of Acharyan, PoorvAchAryAL, Acharya PadukaiGaL, Swami Desikan and Divya Dhampathi, Veda Dharma Samrakshana Sabha has recently started a kainkaryam titled “ஸ்ரீ தூப்புல்மால் ஸத்ஸம்ப்ரதாய க்ரந்தமாலா” to present Sri Desika Prabhandham Moolam and other SrikOsams in asimple, easy to read form (பதம் பிரிக்கப்பட்டது) to benefit the bhagavatas. Our humble request to bhagavatas to download these E-books and benefit. These E-books are in Tamil.

 

With acharya anugraha, we’ve completed the following E-books so for:

 

This kainkaryam is possible solely because of the whole-hearted dedication and kaikarya zeal of Thiruvallur Sri. Raghava Nrusimhan Swamin. Adiyen’s thalaiyallAl kaimmARi lEnE.

 

“ஸ்ரீ தூப்புல்மால் ஸத்ஸம்ப்ரதாய க்ரந்தமாலா” - MediaFire folder:

https://www.mediafire.com/folder/mlnce29bj9xzd/ஸ்ரீதூப்புல்மால்_ஸத்ஸம்ப்ரதாய_க்ரந்த_மாலா